Friday, June 17, 2016



காப்பு

மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே - திங்கட்
புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.

நூல்

சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியா நின்ற வுமையே.
சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்.
சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்
ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ
சிறியனால் முடிந்திராது
சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடனுன்னதம்மா.
சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன்மணியு நீ.
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்,
பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
- பாதச் சிலம்பி னொலியும்,
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும் ;
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும் ,
சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையில் பொன்கங்கணம்,
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்,
அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனாற் சொல்லத் திறமோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்,
கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ
குழப்பமா யிருப்ப தேனோ
விதியீது,நைந்துநான் அறியாம லுந்தனைச்
சதமாக நம்பி னேனே
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக முனக் கிலையோ
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே.
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள்வாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்
பேரான ஸ்தலமு மறியேன்
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
போற்றிக் கொண்டாடி யறியேன்,
வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி,
வாயினாற் பாடியறியேன்,
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
வணங்கியொரு நாளுமறியேன்,
சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்
சரணங்கள் செய்து மறியேன்,
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு,
சாஷ்டாங்க தெண்ட னறியேன்,
ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்
ஆச்சி நீ கண்ட துண்டோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்
பிரியமாயிருந்த னம்மா,
மெத்தனம் உடையை என்றறியாது நானுன்
புருஷனை மறந்தனம்மா,
பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்
பராமுகம் பார்த்திருந்தால்,
பாலன் யானெப்படி விசனமில்லாமலே
பாங்குட னிருப்பதம்மா,
இத்தனை மோசங்களாகாது ஆகாது
இது தர்மமல்ல வம்மா
எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ
யிதுநீதி யல்லவம்மா,
அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ
அதை யெனக்கருள் புரிகுவாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணி மந்தர காரிநீயே
மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ
மலையரையன் மகளானநீ,
தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,
தயாநிதி விசாலாட்சி நீ
தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ
சரவணனை யீன்ற வளும் நீ,
பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்
பேர்பெற வளர்த்தவளும் நீ,
பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ
பிரிய வுண்ணாமுலையு நீ
ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ,
பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ,
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்,
கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்
காதினுள் நுழைந்த தில்லையோ
இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா
இனி விடுவதில்லை சும்மா,
இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்
இதுதரும மல்ல வம்மா,
எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்
ஏதும் நீதியல்ல வம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்
மூடனான் செய்த னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு
மோசங்கள் பண்ணி னேனோ
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா
ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா
சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே
சிறுநாணமாகு தம்மா,
சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக உன்
அடியன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

எந்தனைப் போலவே செனன மேடுத்தோர்க
ளின்பமாய் வாழ்ந் திருக்க,
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
உன்னடியேன் தவிப்பதம்மா,
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்தனுக்கு
பின்னை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை
போக்கடித் தென்னை ரட்சி
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
பிரியமாய்க் காத்திடம்மா
அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பாரதனி லுள்ளளவும் பாக்கிபத்தோ டென்னைப்
பாங்குடனி ரட்சிக்கவும்,
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்
சீர்பெற்ற தேசத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலிய ளணு காமலும்,
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,
பேர்பெற்ற காலனைப் பின்றொடர வொட்டாமற்
பிரியமாய்ச் காத்திடம்மா.
பிரியமாயுன் மீதில் சிறியனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி.
ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்
னம்மை யேகாம்பரி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா,
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனிஜெனன மெடுத்திடாமல்,
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பினேனே,
முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக்காதே யம்மா,
வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனாரேசப் போறார்,
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத் தீருமம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.



Tuesday, May 27, 2014



கணவன் மனைவி இடையே ஏற்படும் மனகசப்புகளை நீக்கி, அன்யோன்யம் மேம்பட கீழ்கண்ட ஸ்துதியை தினமும் சம்மோஹன கிருஷ்ணனின் படத்தின் முன்பு விளக்கேற்றி சொல்லி வரவும். 


ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம்  திவ்ய ஆபரண பூஷிதம் !
த்ரீபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம் !!
பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா !
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம் !!
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை !!
ஸிவேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் !
ஸர்வ காமார்த்த சித்யார்த்தம் மோஹனம் ஸ்ரீ க்ருஷ்ண மாஸ்ரயே !!




Monday, May 26, 2014






இளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர். தமது துறவு நெறிக்கேற்ப நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து பிச்சை ஏற்கப் புறப்படுவார். மற்றவர் இட்டதை உண்டு தம் இறைப்பணியைத் தொடருவார்.அம்முறைப்படி ஒரு நாள் ஸ்ரீசங்கரர் சோமதேவர் என்பவருடைய இல்லத்திற்குச் சென்று "பவதி பிஷாந்தேஹி" என மும்முறை உச்சரித்தார். சோமதேவர் அப்போது இல்லத்தில் இல்லை. அவருடைய துணைவியார் தருவசீலை ஆங்கிருந்தார். பிச்சைக்கு வியப்பு மூண்டது. பாலசங்கரரைப் பார்த்த வுடனே, பரவேஸ்வரனே பிச்சைக்கு வந்துவிட்டாரே என்று அதிசயித்தார். ஆனால் அவரிடத்தில் பிச்சை இடுவதற்கான பொருள் ஏதும் இல்லை. 

கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்த சோம தேவர் வறுமையிலும் தேர்ச்சி அடைந்திருந்தார். அவரும் சங்கரரைப் போலவே பிச்சை கேட்கச் சென்றிருந்தார். வீட்டில் ஒன்றும் இல்லை. எனவே, மிகுந்த வருத்தத்துடன் அம்மையார் சங்கரரைப் பார்த்து, "நான் கொடிய பாவம் செய்தவள். பகவானே பிச்சைக்கு வந்திருக்கும் போது, கொடுப்பதற்கு ஒன்று மில்லையே என ஏங்குகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்" என இறைஞ்சினார். ஆனால் சங்கரரோ, "அன்னையே! அடியேனுக்குக் கொடுக்க ஏதும் இல்லை எனக் கலங்க வேண்டாம். அன்னமிடவழி இல்லை என்றால் பரவாயில்லை. அன்னத்திற்குத் துணையாக இருக்கும் உண்ணக்கூடிய பொருள் எதுவானாலும், எவ்வளவு சிறிதளவேனும் அன்போடு தாருங்கள்" என வேண்டினார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்த தர்வசீலை அம்மையாருக்கு ஒன்றும் கிடைக்காமல் ஒரு பழைய பாத்திரத்தில் நெடுநாட்களுக்கு முன்பு செய்த நெல்லிக்காய் ஊருகாய் ஒன்று மீதமிருந்தது. அந்த நெல்லிக்காயை மிகுந்த மனத்தயக்கமுடன் மகான் சங்கரரின் பிச்சைப் பாத்திரத்தில் அம்மையார் இட்டார். 

இதனால் மனம் மகிழ்ந்த ஆதிசங்கரர், " அன்னையே! அன்புடன் தாங்கள் எனக்களித்த இந்த நெல்லிக்காயைவிடச் சிறந்த பொருள் இவ்வுலகில் எதுவும் கிடையாது. இது என் தாயாருக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். அதிதிக்கு அளித்த இந்த உணவால் உங்களைப் பிடித்திருந்த வறுமை இன்றோடு அழிந்துவிட்டது. இனிமேல் உங்கள் கணவர் பிச்சைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை" எனக்கூறிவிட்டு, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமஹாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து இந்த "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஸ்ரீலட்சுமி தேவியாரை வழிப்பட்டார். 



உடனே தேவி, சங்கரர் முன் எழுந்தருளி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேரசம்பந்தைப் பெற்றனர். வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களை, ஆசார அநுஷ்டானங்களை மறந்து சுக பசி அமர்த்தாமல் தவிக்கவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக, இந்த யுகத்தில் அவர்கள் இங்கே வறுமைப்பிடியில் சிக்கித்தவிக் கின்றனர் என்ற உண்மையை ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலட்சுமி தேவி புலப்படுத்தினார். இருப்பினும் வறுமையிலும் திட மனதுடன் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலட்சுமி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோலப் பொழிந்தார். அது மட்டுமில்லாமல், இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும் என உருதி மொழிந்தார். 

எனவே, நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும்  சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால். நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும். எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி. 

பொன்மொழி பொழியச் செய்த அந்த கனகதாரா ஸ்தோத்திரங்களை ஒவ்வொன்றாக விளக்கவுரையுடன்.  

அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா:
1
மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.
முக்தா முஹீர்விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி
மாலா த்ருசோர் மது கரீவ மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா:
2
ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.
ஆமீலிதாட்ச மதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ மனங்க தந்த்ரம்
ஆகேகர ஸ்தித கனீனிக பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம பூஜங்க சயாங்கனாயா
3
ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.
பாஹ் வந்தரே மது ஜித: ஸ்ரித கெளஸ்துபே யா
ஹாராவலீவஹரி நீலமயி விபாதி
காமப்ரதா பகவதோபி கடாட்ச மாலா
கல்யாணமா வஹதுமே கமலாலயாயா:
4
மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.
காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா தடிதங்கனேவ
மாதுஸ்ஸமஸ்த ஜகதாம் மஹனீய மூர்த்தி
பத்ராணி மேதிசது பார்கவநந்தனாயா:
5
மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில்
இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.
ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேன
மய்யாபதேத்ததிஹ மந்தர மீட்சணார் தம்
மந்தாலஸம் சமகராலய கன்யகாயா:
6
ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.
விச்வாம ரேந்த்ர பதவீ ப்ரமதான தட்சம்
ஆனந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி
ஈஷன் நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம்
இந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா
7
அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.
இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
திருஷ்ட்யாத்ரி விஷ்டப பதம் சுலபம் லபந்தே
திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர திப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா
8
எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.
தத்யாத் தயானுபவனோ த்ரவிணாம் புதாராம்
அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க சிசெள விஷன்ணே
துஷ்கர்ம தர்மமபனீய சிராயதூரம்
நாராயண ப்ரணயனீ நயனாம் புவாஹ:
9
எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.
கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய மேலிஷீ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரி புவனைக குரோஸ்தருண்யை!
10
திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.
ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதெனாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை
11
நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.
நமோஸ்து நாலீக நிபானனாயை
நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை:
12
பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.
நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை
நமோஸ்து பூ மண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை:
13
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.
நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதர வல்லபாயை
14
சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.
நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை:
15
சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.
ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய நந்தனானி
ஸாம்ராஜ்யதான விபவானி ஸரோருஹாக்ஷி
த்வத் வந்தனானி துரிதா ஹரணோத்யதானி
மாமேவ மாதரனிசம் கலயந்து மான்யே
16
எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.
யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத
ஸந்தனோதி வசனாங்க மானஸை
த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே:
17
தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.
ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
தவல தராம்சுக கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்
18
சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.
திக்தஸ்திபி கனக கும்ப முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாகினி விமலசாரு ஜலாம்னு தாங்கீம
ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீ மசேஷ
லோகாதி நாதக்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம்
19
பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை
வணங்கிப் போற்றுகிறேன்.
கமலே கமலாட்ச வல்லபேத்வம்
கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா
20
எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும்
வழியைக் காட்டியருள வேண்டும்.
ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
குணாதிகா குருதர பாக்ய பாகினோ
பவந்தி தே புவி புத பாவிதாசயா
21
மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.
- ஜகத் குரு ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் 




ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தினை mp3 வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்கவும் 

Tuesday, April 29, 2014



ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்துதி

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவிகிம் வத
ராமதூத க்ருபாஸிந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ

------- Ì-------

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்லோகம்

புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர் பயத்துவம் அரோகதா வாக்கு படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரனேத் பவேத்.

( தினசரி காலையில் ஒன்பது முறை சொல்ல வேண்டும் )

------- Ì-------

நினைத்த காரியம் நிறைவேற ஸ்ரீ ஹனுமன் மந்திரம்

த்வஸஸ்மின் கார்ய நிர்யோகே
ப்ரமானம் ஹரி ஸத்தம
ஹனுமன் யத்ன மாஸ்த்தாய
துக்க க்ஷய கரோ பலே !

( தினசரி ஸ்ரீ ஹனுமனை நினைத்து 108 முறை இம்மந்திரத்தை சொல்ல, நினைத்த காரியம் நிறைவேறும் )

------- Ì-------

Thursday, January 9, 2014

பெங்களூரின் சிறந்த வணிகத்தலங்களுள் (shopping mall) ஒன்று.





என் இறுதியாண்டு கல்லுரி படிப்பின் படி, ஏதேனும் ஒரு ப்ராஜெக்ட் செய்ய வேண்டும். சுயமாகவும் செய்யலாம் அல்லது ஒரு நல்ல அங்கீகரிக்கப்பட நிறுவனத்தின் மேற்பார்வையிலும் செய்யலாம். அனுபவத்திற்காக நானும் என் நண்பர்கள் Gokul Sachaமற்றும் Aravindh Kumar ம் பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் செய்ய முடிவெடுத்து அனுமதியும் பெற்றோம்.

அனுமதி கிடைத்ததும் உள்ளுக்குள் ஒரே குழி அதுவும் அலுவல் நேரம் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை தான் என்றவுடன். அப்பாடா மிச்சம் இருக்கும் நேரத்தில் பெங்களூரை நல்லா சுற்றிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். சுற்றி பார்க்க என்ன என்ன இடம்லாம் இருக்குனு விக்கிபீடியா மற்றும் வலைதளங்களில் தேடி இடங்களை குறித்து வைத்துகொண்டோம். அப்படி முக்கியமான இடங்கள் என்று குறித்தவற்றில் இஸ்கான் கிருஷ்ணர் கோவிலும் ஒன்று (எனக்கு கோகுல நாயகனின் மீது தீரா பற்று).

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையிலையே மர்தஹல்லியில் ரூபாய் 60 டிக்கெட் (daily pass) வாங்கிட்டு இஸ்கான் புறப்பட ஆனோம், 10 மணியளவில் இஸ்கான் சென்றடைந்தோம். உள்ளே போகும் போதே ஒரு அவா, அட உலக அளவில் பகவானின் திருநாமத்தை பரவ செய்த அமைப்பினுடைய கோவிலாச்சே, நல்லா பக்தி மனம் கமழும் ஒரு சாந்தம் கிடைக்கும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன் !!!

நுழைவு வாயிலிலே கால் அலம்பும் வசதி இருந்தது, கால் அலம்பிட்டு உள்ளே சென்றால் ஒரு பெரிய விசாலமான இடம், முழுவதும் மழ மழனு இழைச்சு வச்சுருந்தாங்க (என்னதான் மழ மழனு இருந்தாலும் கருங்கல்லில் எழும்பியிருக்கும் கோவிலில் கால் வைத்தவுடன் வரும் பக்தி பரவசம் கிடைபதில்லை). ருக்மனிதேவியுடன் கிருஷ்ணர் நின்ற கோலத்தில் தரிசனம், நல்ல அலங்காரம் பக்கத்திலே பலராமர். சேவித்து விட்டு நகரும்பொழுதே சில அடிகளில் பல மொழிகளில் பகவத்கீதை விற்கும் கடை (கொஞ்சமாவது தள்ளி வைத்திருக்கலாம்) அதை விடுத்து கிருஷ்ணரின் எதிரிலே சிறிது நேரம் அமர்ந்தோம்.

சரி கிளம்பலாம்னு என்று வெளிய போகும் வழியை தேடி போனால் அது கீழே அடி தளத்திற்கு இட்டு சென்றது. போகும் வழியிலே ஒரு இனிப்புக் கடை அதை பலர் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழி அப்படியே வளைந்து வளைந்து நிறைய கடைகளுக்கு கூட்டி சென்றது. அந்த கடைகளில் இல்லாத பொருட்களே இல்லை எனலாம், கிருஷ்ணர் படம் போட்ட பனியன் , சட்டை, பைஜாமா, குர்தானு பெரியவங்க, சிரியவங்க, பெண்கள்னு எல்லாருக்கும் இருக்கு எல்லாத்தையும் வாங்க நிறைய கூட்டம், சாமி கும்பிட எடுத்துகிட்ட நேரத்தை விட அதிகமா செலவு செய்து தங்களுக்காண சரியான அளவுள்ள ஆடைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தார்கள். அதை தாண்டி வந்தா நோட்டு, புத்தகம், பேனா, pen drive, புல்லாங்குழல்னு பல வகை பொருட்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைகிறது.

அப்படியே வந்துட்டு இருந்தா அப்புறம் வருவது உணவகங்கள் மற்றும் இனிப்பு பகுதி. இங்க உங்களுக்கு கிடைக்காத இனிப்பு வகைகளே இல்லை எனலாம். எல்லாம் அதிக விலை தான். இது ஒரு நீண்ட பிரிவு நல்லா நிதானமா எல்லாத்தையும் ருசி பார்கிறார்கள். அதையும் தாண்டி போகும் பொது தான் ஒரு அறிவிப்பு பலகை வெளியே செல்லும் வழினு போட்டிருந்துச்சு. அப்பதான் சட்டுன்னு நினைவே வந்தது, “நாம இதுவரை கோவிலில் தான் இருந்தோம் என்றே”.

அதாவது இஸ்கானின் மொத்த அமைப்பே ஒரு கல்யாண மண்டபம் மாதிரி தான் எனக்கு தோன்றியது. அதாவது மேல கல்யாணம் முடிஞ்சு அப்படியே கீழ சாப்பிட போவாங்களே அது மாதிரி தான். என்ன கல்யாண மண்டபத்திலாவது மேல பெருசாவும், கீழ சாப்பிடும் இடம் சிறுசாவும் இருக்கும். இங்க அப்படியே தலைகீழ். இதையெல்லாம் பார்த்தவுடன் எனக்கு இஸ்கானின் இலக்கு கிருஷ்ண நாமத்தை பரப்புவதா இல்லை பெரு வணிக நிறுவனங்களுக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் செய்யதா என்றே புரிய வில்லை.

பெங்களூரில் நான் நிறைய வணிகதலங்க்களுக்கு சென்று வந்தேன். அப்பொழுது கிருஸ்துமஸ் நேரம் என்பதால் எல்லா வளாகங்களும் ஒரு இடத்தில சிறிதும் பெரியதுமாக கிறிஸ்துமஸ் குடில் அமைத்து அலங்காரப் படுத்தியிருந்தார்கள். இஸ்கான் இவர்களிடம் இருந்து வேறுபடுவது ஒரே விசியத்தில் தான், அவங்க கிறிஸ்துமஸ் முடிந்ததும் குடிலின் அலங்காரங்களை கலைத்து குடிலை அகற்றி விடுவார்கள் ஆனால் இவர்களோ கிருஷ்ண ஜெயந்தி முடிந்தாலும் கிருஷ்ணரை அகற்றாமல் அலங்காரங்களை தொடர்கிறார்கள் ( பின்ன கூட்டம் கூடுதுல ).

மொத்தத்தில் இஸ்கானுக்கு ஒருநாளின் பாதியை ஒதுக்கியதில் ஏமாற்றமே மிச்சம்.

இவன்
--- - கிருஷ்ண பக்தன்
 —

Thursday, October 24, 2013


எந்த மென்பொருள்கள் பயன்படும் என்பதை பார்பதற்க்கு முன்னர் தமிழ் மொழியை எந்த எந்த முறைகளில் உள்ளிடலாம் என்பதை முதலில் பார்போம். பரவலாக இரண்டு வழிகளில் நாம் தமிழை தட்டச்சு செயலாம். முதலாவது தமிழ் மொழிகென்றே வடிவமைக்கப் பட்ட கீபோர்ட் மூலமாக . இதற்க்கு உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
(எ.கா: tamil 99 key board, tamil old typewriting keyboard, tamil new typewriting key board.) முதலாவது முறையில் தட்டச்சு செய்ய மேற்சொல்லியிருக்கும் விசைபலகைகளில் ஏதேனும் ஒன்றை கற்றிருக்க வேண்டும். இது கொஞ்சம் சிரமமான வழி ஆனால் சரியான வழி.
இரண்டாவது முறை நம்மை போன்ற சோம்பேறிகளுக்கானது, அது தான் phonetic keyboard முறை. இந்த முறையில் நாம் (amma) என்று தட்டசிட்டாலே (அம்மா ) என்று வந்துவிடும், இதுதான் பலராலும் உபயோகப்படுத்தும் முறையேன்றாலும், கொஞ்சம் தவறான முறைதான். தமிங்க்லீஷில் தட்டச்சு செய்வதற்க்கு இது பரவாயில்லை.  
  
தமிழ் மொழி என்றில்லை, இந்திய மொழி அனைத்திலும் தட்டச்சு செய்வதற்கு அனைவராலும் பரவலாக உபயோகப் படுத்தபடும் மென்பொருள்கள் 3 . அவை,

1. Google Input Tools:
இந்த மென்பொருள் கூகிள் குழுமம் தரும் இலவச மென்பொருள்.  இதன் மூலம் இந்திய மொழிகள் மட்டுமின்றி 22 மொழிகளில் தட்டச்சு செய்ய உதவுகிறது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுதுள்ள இணைபிற்க்கு செல்லுங்கள். இது போனேடிக் (phonetic) வகையை சார்ந்தது.

இது மைக்ரோசாப்ட் தரும் இலவச மென்பொருளாகும், இது இந்திய மொழிகளுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இதுவும் போனேடிக் (phonetic) வகையை சார்ந்தது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுதுள்ள இணைபிற்க்கு செல்லுங்கள்.


இது New Horizon Media என்ற நிறுவனத்தால் தரப்படும் இலவச மென்பொருளாகும். இதிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற முக்கிய இந்திய  மொழிகளை தட்டச்சிடும் வசதி தரப்பட்டுள்ளது. மேலும் இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக, போனேடிக் மட்டுமல்லாது, இதர விசைபலகைகளும் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே இது பலராலும் விரும்பி பயன்படுத்தப் படுகிறது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுதுள்ள இணைபிற்க்கு செல்லுங்கள்.


நம்மால் பெரியதாய் தமிழ் மொழியை வளர்க்க முடியாவிட்டாலும், கூடிய மட்டும் தமிழை உயிர்ப்போடாவது வைத்திருக்க பங்களிப்போம்.ஏதேனும் விளக்கம் வேண்டின் கருத்துறையிடுக.....  படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தமிழ் 99 விசைப்பலகை. 



Monday, October 14, 2013


பணப் பற்றாக்குறையைச் சமாளிக்க வாங்கும் பணம் பட்டும் கடன் அல்ல. அப்படியெனில் மற்ற கடன்கள் என்ன என்று கேட்கதொன்றுதா....?

நமுடன் வாழ்பவர், நம்மையே ஆதாரமாக நம்பி வாழும் நமது பெற்றோர், மனைவி, குழந்தைகள், முன்னோர்கள்,நம்மை வாழவைத்த தெய்வம் என அனைவருக்கும் கடன்பட்டிருக்கிறோம்.நாம் தீர்க்கவேண்டிய கடன்களே நமக்கு பணப் பற்றாக்குறையை உண்டாக்குகிறது.நோய் ஏற்ப்பட பல காரணங்கள் உள்ளன, கடனும் அதில் ஒன்று.

சரி மேல சொன்ன எல்லா கடன்களும் தீர என்ன பரிகாரம் என்று இப்பொழுது பார்ப்போம்...



  • தினமும் காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் 6,8 மடங்காக,                         ( 6,8,12,16,18,32,36,64,108 ) முறை தினமும் பாராயணம் செய்ய கடன் அடைபடும்.
  • கடனை செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிச் செலுத்துவது உகந்தது.
  • முகிகியமாக செவ்வாய், சனிக்கிழமைகளில் கடன் வாங்கக் கூடாது.
  • இது தவிர மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் தினமும் காலை, மாலை பாராயணம் செய்தால் இன்னும் நல்லது.


எனக்கு கடன் பிரச்சினை இல்லை. எதிர் காலத்தில் இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைபவர்களும் தினமும் ஒரு முறை படித்து வரலாம். நம்பிக்கையோடு படித்தால் நிச்சயம் பலன் உண்டு.


* அனைவரும் எல்லா வளங்களும் பெற இறைவனை வேண்டுவோமாக *
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff